சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று(பிப்., 27) நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுபோடும் உறுப்பினர்களாக 1900பேர் உள்ளனர். இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 சேர்த்து 1521 ஓட்டுகள் பதிவாகின.
செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின.
மொத்தம் பதிவான ஓட்டுகள் - 1521. செல்வமணி பெற்ற ஓட்டுகள் -955. பாக்யராஜ் பெற்ற ஓட்டுகள்-566. இதன்மூலம் 389 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர் கே செல்வமணி வெற்றி பெற்று, இயக்குனர் சங்க தலைவராக மீண்டும் தேர்வானார்.