பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

முன்னணி தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். விண்ணைத்தாண்டி வருவாயா, கோ, நடுநிசி நாய்கள், வெப்பம், நீதானே என் பொன்வசந்தம், யாமிருக்க பயமே, யான் உள்ளபட பல படங்களை தயாரித்து உள்ளார். அமலாபால், அதர்வா நடித்த முப்பொழுதும் உன் கற்பனைகள் என்ற படத்தை இயக்கினார். எல்ரெட் குமார் சினிமா தயாரிப்புடன் கல்குவாரி உள்ளிட்ட வேறுபல தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகிறார்.
இவர் மீது வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்வதாக வருமானவரித்துறைக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து எல்ரெட் குமாருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் 2வது நாளாக நேற்று நள்ளிரவு வரை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
எல்ரெட் குமாரின் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வுக்கு பிறகுதான் அவர் எத்தனை கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று தெரியவரும், என்று வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.