அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
தெலுங்கு திரையுலகில் உள்ள கமர்சியல் இயக்குனர்களில் முக்கியமானவர் போயபதி சீனு. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவை வைத்து இவர் இயக்கிய அகண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் வசூலையும் வாரி குவித்தது. இதையடுத்து அவர் ராம் பொத்தினேனியை வைத்து இயக்கியுள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை பொதுமேடையிலேயே வெளிப்படுத்தியுள்ளார் போயபதி சீனு.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதை தொடர்ந்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு என புரமோஷன் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் கலந்துகொண்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சமீபத்தில் நடத்தினர்.
இதை தொடர்ந்து 'எவரிகி தல வன்சாடு' என்கிற பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ள இந்தப்படத்திற்காக ஐதராபாத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக போயபதி சீனு கலந்து கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசும்போது, சூர்யாவுடன் ஒரு படத்தில் நிச்சயமாக இணைந்து பணியாற்றுவேன் என தனது விருப்பத்தை வெளிப்படுத்த, சூர்யாவும் அதை ஆமோதித்தார்.