சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
நடிகர் கார்த்தியின் உழவர் பவுண்டேஷன் சார்பில் ‛உழவர் விருதுகள் 2022' என்ற தலைப்பில் விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் உள்ள தி.நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, இயக்குனர் வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். இயற்கை விவசாயம் நீர்நிலை, பாரம்பரிய விதை மீட்பு, சந்தைப்படுத்துவது. விவசாயிகள் மற்றும் விவசாயம் சார்ந்த குழுக்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் தனிநபர் மற்றும் குழுக்கள் என மொத்தம் 6 விருதுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருது பெற்றவருக்கும் ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையும் வழங்கபட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசும்போது, உழவன் பவுண்டேஷன் தொடங்கியுள்ள கார்த்தி ஒரு ஏழைப் பெண் விவசாயின் பேரன். இளைய தலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட வேண்டும். நான் பிறந்த போது பத்து மாதத்தில் அப்பா இறந்து விட்டார். என் அம்மாதான் என்னை வளர்த்தார். அரளி செடியும் எருக்கம் செடியும் உள்ள ஊரில் என்னை வளர்த்தார் என் அம்மா. எனக்கு தலை வாரி விட்டதில்லை. உணவு ஊட்டி விட்டதில்லை. தனியாளாக விவசாயம் செய்து என்னை காப்பாற்றினார் என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதார். மேலும், பெண்கள்தான் விவசாயத்தில் அதிகமான வேலைகளை செய்கிறார்கள். சிலையை தான் நாம் கும்பிடுகிறோம். கடவுளை யாரும் பார்த்ததில்லை. பெண்கள்தான் கடவுள் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் நடிகர் சிவகுமார்.