தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பாவனி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின்போது அபினய் உடனான காதல் தோற்றம், அமீரின் முத்த சர்ச்சை என தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தபோதும் 100 நாட்களும் பிக்பாஸ் வீட்டில் இடம் பிடித்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார். இந்நிலையில் மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனியிடத்தில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்குவது குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு போகவில்லையே என்று வருத்தமாக உள்ளது. மீண்டும் என்னை அழைத்தால் சிம்புவுக்காக நான் செல்வேன். அந்தளவுக்கு அவர் மிக அருமையாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அடுத்த முறை சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது எனக்கும் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்பேன் என தெரிவித்திருக்கிறார் பாவனி.