23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், ராதிகா சரத்குமர் நடிக்கும் கொலை படத்தின் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. விஜய் ஆண்டனி, இதில் துப்பறியும் நிபுணராக நடித்திருக்கிறார். ரித்திகா சிங், சந்தியா என்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார், பாலாஜி குமார் இயக்கி உள்ளார்.
இந்த படம் தெலுங்கில் ஹத்யா என்ற பெயரிலும் தயாராகி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் பாலாஜி குமார் கூறியதாவது: கதை லீலா என்ற அழகான மாடலைப் பற்றியது, அவர் தனது குடியிருப்பில் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையின் பின்னணியில் படம் தயாராகி உள்ளது. கொலையாளி எப்படி கண்டுபிடிக்கப்பட்டார் என்பதுதான் திரைக்கதை என்றார்.
விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் தவிர, ஜான் விஜய், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர், அர்ஜுன் சிதம்பரம், கிஷோர் குமார், சம்கித் போஹ்ரா உள்பட பலர் நடித்துள்ளனர். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.