திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இந்த தேர்தலை எதிர்த்து துணை நடிகர்களான ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, தேர்தலை ரத்து செய்தார். மேலும், மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரையில் அரசு நியமித்த தனி அதிகாரியே சங்க நிர்வாகத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, 'தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் செல்லும். தேர்தலில் பதிவான ஓட்டுகளை 4 வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும்,' என கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து துணை நடிகர் ஏழுமலை உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நேற்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் முன் விசாரணைக்கு வந்தது.-அப்போது நீதிபதி எம்.என்.சுந்தரேஷ் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தபோது அதிலிருந்து நான் விலகி விட்டேன். இப்போதும் விலகிக் கொள்கிறேன் இதற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் இல்லை. என்று கூறினார். இதனால் இந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.