திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பிரபாஸ், பூஜா ஹெக்டே, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான 'ராதேஷ்யாம்' படம் நேற்று முன்தினம் ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது.
பிரபாஸ் ரசிகர்கள் ஒரு பிரம்மாண்ட ஆக்ஷன் படத்தை எதிர்பார்க்க, படமோ ஒரு முழுநீள காதல் காவியமாக இருந்தது. பல தெலுங்கு ஊடகங்கள் இந்தப் படத்தை கடுமையாகவே விமர்சனம் செய்து எழுதியிருந்தனர். மெதுவாக நகர்கிறது, வெறும் காதல் மட்டுமே உள்ளது என்றெல்லாம் விமர்சித்திருந்தார்கள். படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லையென்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் நேற்று படத் தயாரிப்பு நிறுவனம் படத்தின் முதல் நாள் வசூல் 79 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வசூல் பற்றி வந்த செய்திகளுக்கு தயாரிப்பு நிறுவனம் பதிலடி கொடுக்க, விமர்சனங்களுக்கான பதிலடியாக படத்தின் இயக்குனர் ராதாகிருஷ்ணகுமார் பதிவிட்டுள்ளார். “பிரம்மாண்டமான வரவேற்புக்கு அனைவருக்கும் நன்றி. நாங்கள் அன்புடன் இந்தப் படத்தை எடுத்தோம், நீங்கள் பதிலுக்கு அன்பைப் பொழிகிறீர்கள். விமர்சனங்கள் தேவை அல்ல, ரிசல்ட்தான் மேட்டர், பிளாக்பஸ்டர் ராதேஷ்யாம்” என்று அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.