தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நேரம், பிரேமம் என இரண்டே படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களிடையேயும் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். குறிப்பாக இவர் இயக்கிய இரண்டு படங்களின் மூலம் அழகும் திறமையும் வாய்ந்த நான்கு கதாநாயகிகளை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர்
ஆனால் பிரேமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் தற்போது பிரித்விராஜ், நயன்தாரா ஜோடியாக நடிக்கும் கோல்டு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் அல்போன்ஸ் புத்ரன் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடியபோது ரசிகர் ஒருவர் விஜய்யை வைத்து எப்போது படம் இயக்குவீர்கள் என்கிற கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த அல்போன்ஸ் புத்ரன், "பிரேமம் படம் வெளியானதும் தமிழ்நாட்டில் இருந்து எனக்கு முதல் வந்த பாராட்டு அழைப்பு நடிகர் விஜய்யிடம் இருந்து தான். அதன்பிறகு அவரை நான் பர்சனலாக நேரிலும் சந்தித்து பேசினேன். ஒருநாள் அவர் என்னை அழைத்து படம் இயக்க சொல்லுவார் என நம்புகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.