பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' படம் நாளை மறுதினம் மார்ச் 25ம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
கன்னட மொழி பேசப்படும் கர்நாடகாவில் இப்படத்தை கன்னடத்தில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதை விட தெலுங்கு, தமிழ், ஹிந்தியில் அதிக தியேட்டர்களில் வெளியிடுவதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. மேலும், ஆன்லைன் இணையதளங்கள் மூலம் கன்னடப் பதிப்பைப் பார்ப்பதற்கு இன்னும் முன்பதிவை ஆரம்பிக்கவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிப் பதிப்பை பார்ப்பதற்கு மட்டுமே முன்பதிவு நடந்து வருகிறது.
இதனால், ஆத்திரமடைந்துள்ள கன்னட ரசிகர்கள் 'ஆர்ஆர்ஆர்' குழுவினரைக் கண்டித்தும், ராஜமவுலியைக் கண்டித்தும் டுவிட்டர் தளத்தில், “#BoycottRRRinKarnataka ” என்ற ஹேஷ்டேக்கை டிரென்ட் செய்து வருகின்றனர்.