திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் சிவா கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் நேர்காணலில் கூறிய சிவா , தான் அடுத்ததாக ரஜினி, அஜித், விஜய் ஆகியோருடன் புதிய படத்திற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்டார் .
இந்நிலையில் அவர் அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கிராமத்து கதைக்களத்தில் இருக்கும் இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் . ஏற்கனவே சூர்யாவின் ஒரு படத்தை சிவா இயக்குவதாக இருந்தது. ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.