இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பிரபல மாடலான மீரா மிதுன் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு நீதிபதி எஸ். அல்லி அமர்வின் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அதில், மீரா மிதுன் ஆஜராகாததால் அவரை ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், ஏப்ரல் 4 ஆம் தேதிக்குள் மீரா மிதுனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ள மீரா மிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொண்டார். சினிமாவில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்துவிட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நுழைந்து பிரபலம் தேடினார். ஆனால், அதுவும் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. இந்நிலையில், தனது நண்பருடன் சேர்ந்து கொண்டு அடிக்கடி சர்ச்சையான கருத்துகளை பேசி வந்த அவர், பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பேசியிருந்தார். இதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அதன்பின் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.