இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தவர் துணை நடிகை மீரா மிதுன். அழகி போட்டி நடத்துவதாக கூறி மோசடி செய்ததாக அவர் மீது ஒரு புகார் உள்ளது. இதேப்போல சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரை சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் எம்கேபி நகர் காவல் நிலையத்தில் மீரா மிதுன் மீது ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் மீரா மிதுன் எனது படத்தை பயன்படுத்தி என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பி வருகிறார் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரிக்க தற்போது சிறையில் இருக்கும் மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுக்க எம்கேபி நகர் போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். பட்டியல் இனத்தவர் பற்றிய அவதூறாக பேசிய வழக்கில் தற்போது மீரா மிதுன் சிறையில் இருக்கிறார். அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. இந்த வழக்கில் மீரா மிதுனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க குற்றபிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இரண்டும் ஒரே காலகட்டத்தில் நடக்கலாம் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.