ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தெலுங்கில் வெளியான படம் புஷ்பா. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஓ சொல்றியா மாமா என்ற கவர்ச்சி குத்தாட்ட பாடலில் சமந்தா நடனம் ஆடி இருந்தார். அந்த பாடலுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படம் ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை செய்தது.
இதன் காரணமாக புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்திலும் ஐட்டம் பாடல் ஒன்று இடம் இருக்கிறது. அதில் மீண்டும் சமந்தாவை நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதன் காரணமாக தற்போது அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை திஷா பதானிக்கு சென்றுள்ளது. அவர் ஓகே சொல்லிவிட்டார்.
திஷா பதானி தான் புஷ்பா படத்தில் சமந்தா நடனம் ஆடிய பாடலுக்கு முதலில் நடனமாட இருந்தவர். அவரது கால்ஷீட் பிரச்சனை காரணமாக பின்னர் இந்த பாடலில் நடனமாட சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.