தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கியுள்ள நெல்சன் திலீப்குமார் அடுத்து ரஜினி நடிக்கும் 169 ஆவது படத்தை இயக்கப் போகிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இது குறித்த தகவல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
நெல்சன் அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் ரஜினி படம் இயக்குவதற்கு விஜய் தான் காரணம். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது தனது அடுத்த படத்திற்கான கதையை ரஜினி கேட்டு வருவதாக கூறிய விஜய், நீங்கள் ஏன் முயற்சி செய்யக் கூடாது என்று கூறினார். ஆனால் ரஜினி மிகப்பெரிய லெஜண்ட் என்பதால் அவருக்கு எப்படி கதை தயார் செய்வது என்று தயக்கமாக இருந்தது. ஆனால் விஜய் என்னுடைய தயக்கத்தை உடைத்தெறிந்து ரஜினி இடத்தில் கதை சொல்ல வைத்தார். அவர் கொடுத்த தைரியம் நம்பிக்கை காரணமாக தான் இப்போது நான் ரஜினியின் 169வது படத்தை இயக்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் நெல்சன்.