பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. தற்போது பொன்னியின் செல்வன், விருமன் படங்களில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி நடிப்பில் ஏப்ரல் 2ல் வெளியான சில படங்கள் சினிமாவில் அவருக்கு முக்கிய இடத்தை தந்துள்ளது. குறிப்பாக அவரின் சூப்பர் ஹிட் படங்களான பையா, கொம்பன் மற்றும் சுல்தான் ஆகிய மூன்று படங்களும் இந்த தினத்தில் வெளியானவை.
இதுப்பற்றி கார்த்தி கூறுகையில், ‛‛பையா படம் எனக்கு புது பிம்பத்தை வெளிப்படுத்த வித்திட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் என்னை கிராமத்து மண்ணுக்கு கொம்பன் அழைத்துச் சென்றது. சுல்தான் மீண்டும் என்னை வாண்டுகளை வசப்படுத்த வைத்தது. இவை எல்லாமே ஒரே வெளியீட்டு தேதியில் தான். இந்தப் படைப்புகளை நினைவுகளில் நிலைநிறுத்திய இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி'' என்கிறார்.