திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? | அகண்டா 2 : டப்பிங் பணிகளை நிறைவு செய்த பாலகிருஷ்ணா | வார் 2 படத்தில் சர்ப்ரைஸ் பாடல் | இயக்குனர் ஆகிறார் ரோபோ சங்கர் |
நடிகர் சரத்குமார் தற்போது போர்த்தொழில், பரம்பொருள் மற்றும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ரசிகர்களுடன் மதிய உணவு சாப்பிட விரும்பிய சரத்குமார், ‛சரத்துடன் மதிய உணவு' என்ற பெயரில் நடத்திட திட்டமிட்டுள்ளார். ரசிகர்கள், நலம் விரும்பிகளுடன் உணவருந்தி, உரையாட காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் விருப்பமுள்ளவர்கள் தங்களின் விபரங்களை மெயில் அனுப்ப வேண்டும் என்றும், அதில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் உரையாடலுடன் மதிய உணவு சாப்பிட விரும்புவதாக கூறியுள்ளார். இது தொடர்பான விபரங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு: என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதைகளை சற்று நினைவுகூறும் போது, வீடுகளுக்கு பத்திரிகை போடும் இளைஞனாக, சிறு பணியில் துவங்கிய பயணம், எத்தனை எத்தனையோ போராட்டங்கள், வேதனைகள், வலிகளுடன் இன்று நான் இருக்கும் உயரத்திற்கு அழைத்து வந்துள்ளது. இந்த இடத்தை அடைய எத்தனை நீண்ட தூரம் பயணித்துள்ளேன் என திரும்பி பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.
இத்தருணத்தில் என்னை விமர்சித்து, ஊக்குவித்து, ஆதரித்து ஏற்றுக்கொண்ட உங்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். என் வாழ்க்கை பயணத்தில் பொதுவாக பலரை சந்தித்திருக்கிறேன். என்னை சந்திக்க விரும்பிய பலரை சூழல் காரணமாக சந்திக்க இயலாமல் இருந்திருக்கிறேன். தற்போது, தூரத்தில் இருந்து என்னை கண்டவர்களை, அருகில் கண்டு உபசரிக்க ஓர் வாய்ப்பாக "சரத்துடன் மதிய உணவு" திட்டமிட்டுள்ளேன். உங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்! வாருங்கள், சந்திப்போம்!!. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.