வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழின் முன்னணி நடிகர்கள் தற்போது தெலுங்கு திரையுலகிலும் நேரடி படங்களில் நடிக்க துவங்கியுள்ளனர். அப்போது அந்த பட்டியலில் இணைந்துள்ள நடிகர் விஷ்ணு விஷாலும் தெலுங்கில் கட்டா குஸ்தி என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை தெலுங்கு முன்னணி நடிகர் ரவிதேஜா தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான எப்ஐஆர் படத்தை தெலுங்கில் வெளியிட்டவர் ரவி தேஜா தான்.
செல்லா அய்யாவு என்பவர் இயக்கும் இந்த கட்டா குஸ்தி படம் மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமி நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டிலுடன் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பிலிருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டுள்ள நாயகி ஐஸ்வர்ய லட்சுமி தென்காசி பகுதி தன்னுடைய மனதை கவர்ந்து விட்டதாகவும், தான் ஏதோ இந்த பகுதியை சேர்ந்தவர் போன்ற உணர்வு தனக்குள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.




