இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
முன்னாள் முதல்வர் கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுதிய 'கலைஞரின் கண்ணம்மா' என்ற படத்தை இயக்கி, தயாரித்தவர் பாபா விக்ரம். இந்த படத்தில் மீனா நாயகியாக நடித்திருந்தார். பிரேம்குமார் ஹீரோவாக நடித்திருந்தார். இதுதவிர என் இதய ராணி, பொம்மை நாய்கள் உள்ளிட்ட சில படங்களை தயாரித்து, இயக்கி உள்ளார். கடைசியாக இமான் அண்ணாச்சி ஹீரோவாக நடிக்கும் அதிர்ஷ்டம் என்ற படத்தை இயக்கி வந்தார்.
83 வயதான பாபா விக்ரம், முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி தனது சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு அன்ன பாபா ஆலயம் என்ற பெயரில் சாய்பாபாவுக்கு ஓர் ஆலயத்தை நிறுவி வழிபாடு செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே பல்வேறு உடல்நல பிரச்சினைகளில் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவருக்கு லட்சுமி என்கிற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.