ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து அவரை வைத்தே மீண்டும் ஜனகணமன என்கிற படத்தையும் இயக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி நடித்துவரும் காட்பாதர் படம் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகிறார் பூரி ஜெகன்நாத். படப்பிடிப்புத் தளத்திற்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ள சிரஞ்சீவி இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தான் தற்போது காட்பாதர் என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான வேடம் ஒன்றில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு விடைபெற்ற நிலையில் தற்போது பூரி ஜெகன்நாத் முதல் முறையாக ஒரு நடிகராக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரணை முதன்முறையாக சிறுத்தா என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான். தற்போது அவரையே தனது படத்தில் நடிகராக அறிமுகப்படுத்துகிறார் சிரஞ்சீவி.