தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
ராஜமவுலி படங்களின் பிரமாண்டத்துக்கும், வெற்றிக்கும் தனித்தன்மை வாய்ந்த கதைகளை உருவாக்கி கொடுத்து பக்கபலமாக இருந்து வருபவர் அவரது தந்தை விஜயேந்திர பிரசாத். சமீபத்தில் வெளியாகி ஆயிரம் கோடி வசூல் என்கிற மிகப்பெரிய இலக்கை தொட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் இரண்டு தூண்களாக நடித்த ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் கதாபாத்திர தேர்வு குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை வெளிப்படையாக கூறியுள்ளார்.
“இந்தப்படத்தின் கதையை உருவாக்கும்போதே இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் தான் நடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்துவிட்டோம்.. அதன்பின் அல்லூரி சீதாராம ராஜூ வேடத்தில் ராம் சரணையும், கொமரம் பீம் கதாபாத்திறல் ஜூனியர் என்டிஆரையும் நடிக்க வைக்க முடிவு செய்தோம்..
காரணம் ஜூனியர் என்டிஆரால் சீதாராம் கேரக்டரிலும் நடிக்க முடியும்.. கொமரம் பீமாகவும் நடிக்க முடியும்.. ஆனால் ராம்சரணுக்கு கொமரம் பீம் கதாபாத்திரம் செட்டாகாது. ஏனென்றால் கொமரம் பீம் கதாபாத்திரம் பலவகையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய ஒன்று.. ஜூனியர் என்டிஆர் இயல்பாகவே அதில் பொருந்தி விடுவார்.. அதேசமயம் எந்நேரமும் சீரியஸாக இருக்கும் சீதாராம் கதாபாத்திரத்திற்கு ராம்சரண் ரொம்பவே பொருத்தமாக இருந்தார்” என கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.