ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சூர்யாவின் திரையுலக வாழக்கையில் நந்தா மற்றும் பிதமாகன் படம் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சூர்யாவின் 41வது படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மீனவராக சூர்யா நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்காக கடற்கரை பகுதியில் மீனவர்கள் வசிக்கும் குடிசைகள் போல பல குடிசை வீடுகளை நிஜமாகவே உருவாக்கி பட்டப்படிப்பை நடத்தி வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவற்றை பிரிக்காமல், அந்தப்பகுதியில் வசிக்கும் வீடில்லாத மக்கள் சிலருக்கே அவற்றை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அவரது இந்த முடிவுக்கு அந்த பகுதி மக்களிடமும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.