ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சூர்யாவின் திரையுலக வாழக்கையில் நந்தா மற்றும் பிதமாகன் படம் மூலம் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் இயக்குனர் பாலா. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் சூர்யாவின் 41வது படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் மீனவராக சூர்யா நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதற்காக கடற்கரை பகுதியில் மீனவர்கள் வசிக்கும் குடிசைகள் போல பல குடிசை வீடுகளை நிஜமாகவே உருவாக்கி பட்டப்படிப்பை நடத்தி வருகின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் அவற்றை பிரிக்காமல், அந்தப்பகுதியில் வசிக்கும் வீடில்லாத மக்கள் சிலருக்கே அவற்றை இலவசமாக கொடுக்க முடிவு செய்துள்ளாராம் சூர்யா. அவரது இந்த முடிவுக்கு அந்த பகுதி மக்களிடமும் ரசிகர்களிடமும் இருந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.