ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குவைத் : விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பதட்டத்தை தூண்டுகிறது, அமைதியை குலைப்பதாக இருக்கிறது என மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் வெளியாகி உள்ளது. முஸ்லீம்களை பயங்கரவாதிகள் போன்று சித்தரித்துள்ளதாக கண்டனம் எழுந்த நிலையில் இப்படத்திற்கு குவைத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் குவைத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் எம்எல்ஏ.,வும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது : புனித ரமலான் அமைதியை தருகிறது. தமிழகத்தில் திரைப்படங்கள் வழியே சிலர் வெறுப்பை விதைக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தை கொச்சைப்படுத்த முனைகிறார்கள். ஏற்கனவே அர்ஜுன், விஜயகாந்த், கமல்ஹாஸன் போன்றவர்கள் இந்த தவறை செய்தார்கள். இப்போது பீஸ்ட் படம் விஜய் இந்த தவறை மூலம் செய்துள்ளார். ஏற்கனவே துப்பாக்கி படம் மூலம் அவர் இதுமாதிரியான பிரச்னைகளை சந்தித்தார்.
![]() |