ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினி. அதன் பிறகு கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். ஆனால் இந்த இரண்டு படங்களுமே தோல்வி அடைந்து விட்டன. கடந்த 7 ஆண்டுகளாக படங்கள் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா ரஜினி, தற்போது மீண்டும் முழுவீச்சில் படங்கள் இயக்குவதில் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் பயணி என்ற வீடியோ ஆல்பத்தை இயக்கி வெளியிட்டார். அடுத்து அவர் விரைவில் பாலிவுட்டில் ஒரு படம் இயக்க போகிறார்.
இதுபற்றி ஐஸ்வர்யா கூறுகையில், வை ராஜா வை படம் திரைக்கு வந்த நேரத்தில் ஹிந்தியில் படம் இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால் எனது மகன்கள் சிறுவர்களாக இருந்ததால் அப்போது படம் இயக்குவதில் கவனம் செலுத்த முடியவில்லை. தற்போது ஒரு படத்தை இயக்குகிறேன் என்றவர், ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர்சிங் போன்ற நடிகர்களை வைத்து படம் இயக்க தான் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.