தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் நேரம் படத்தில் அறிமுகமான மலையாள நடிகை நஸ்ரியா, அதன் பிறகு ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நய்யாண்டி என பல படங்கள் நடித்தார். பகத் பாசிலை திருமணம் செய்து கொண்ட பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் பின்னர் மலையாள படங்களில் நடித்து வந்தார். தற்போது தெலுங்கில் நானி நடித்துள்ள அன்டி சுந்தரானிகி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் தமிழில் அடடே சுந்தரரா என்ற பெயரில் வெளியாகிறது. இப்படத்தில் முஸ்லீம் பெண்ணான நீங்கள் லீலா தாமஸ் என்ற ஒரு கிறிஸ்தவ பெண் வேடத்தில் நடித்திருப்பது ஏன்? என்று அப்படத்தின் பிரஸ்மீட்டில் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இந்த படத்தில் கிறிஸ்தவ பெண்ணாக நான் இந்து ஆணுக்கு மனைவியாகும் வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தின் கதையும் எனது கேரக்டரும் ரொம்ப பிடித்திருந்தது. அதில் ஒரு ஸ்பார்க் இருந்தது. அதனால் தான் ஒப்புக்கொண்டேன். மற்றபடி முஸ்லிம் பெண் கிறிஸ்தவ பெண் வேடத்தில் நடிக்க கூடாது என்பதெல்லாம் இல்லை. கதை பிடித்திருந்தால் எந்த மாதிரி வேடத்திலும் யாரும் நடிக்கலாம் என்றும் ஒரு பதில் கொடுத்திருக்கிறார் நஸ்ரியா.