ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் ராம்சரண் ஜோடியாக ஹிந்தி நடிகையான ஆலியா பட் அறிமுகமானார். படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்ற சர்ச்சை படம் வெளிவந்த உடன் எழுந்தது. மேலும், படம் பற்றிய சில புகைப்படங்கள், பதிவுகளை ஆலியா பட் நீக்கிவிட்டார் என்றும் பரபரப்பானது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆலியா பட் பற்றிய சர்ச்சைகளுக்குப் பதில் அளித்துள்ளார் ராஜமவுலி. “எனக்கு உண்மையில் ஆலியா பட்டை ரொம்பப் பிடிக்கும். அவருடைய நடிப்பிற்கும், திறமைக்கும் அவரை மிகவும் மதிக்கிறேன். அவருடன் மீண்டும் பணியாற்ற ஆவலுடன் இருக்கிறேன். அவரும் என்னைப் பற்றி இப்படித்தான் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். அவரும் நானும் நடிகையாக, இயக்குனராகப் பணியாற்றினோம்.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் அவருக்குப் பெரிய கதாபாத்திரம் இல்லை. அது மிகவும் சிறிய கதாபாத்திரம் என்பது தெரியும், ஆனால், இரண்டு சக்திகளை ஒன்றிணைக்கும் மிக மிக முக்கிய கதாபாத்திரம். அதைத்தான் நான் ஆலியாவிடம் சொன்னேன், அவரும் க்ரீன் சிக்னல் கொடுத்தார். இருவரும் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அவருடன் வரும் நாட்களில் உண்மையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என காத்திருக்கிறேன்,” எனப் பதிலளித்துள்ளார்.