இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் ஒரு படத்தில் திரிஷா நடிக்கிறார். பல குறும்படங்கள், விளம்பர படங்கள் மற்றும் வெப்தொடர் எடுத்த அருண் வசீகரன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இழப்பதற்கு எதுவுமில்லாத ஒரு பெண் இரத்த பூமியில் மேற்கொள்ளும் ஆக்ரோஷமான பயணமே கதையின் கரு. 2000களில் மதுரையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது.
திரிஷா முதன்மை நாயகியாக நடிக்க, அவருடன் மியார் ஜார்ஜ், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் நடிக்கிறார்கள். உண்மை சம்பவம் நிகழ்ந்த மதுரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று(ஏப்., 25) முதல் படப்பிடிப்பை துவக்கி உள்ளனர். தொடர்ச்சியாக 50 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.