தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
150 படங்களை நெருங்கி விட்டவர் சரத்குமார். அரசியலுக்கு சென்றார், எம்.பி.ஆனார். சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் கமல் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார். தோல்வியை சந்தித்தது கட்சி. இதனால் அரசியல் பணிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்து விட்டு சினிமாவில் பிசியாகி விட்டார். சமீபத்தில் சரத்குமார் நடித்த இரை என்கிற வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது அரவிந்தராஜ் இயக்கத்தில், 'பரம்பொருள்' என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் போட்டியே படத்தின் கதை. 'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்சுக்கு வில்லனாக நடிக்கிறார். இது தவிர பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கிறார்.
விஜய்யின் 66வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்னேஷ் ராஜ் இயக்கத்தில் 'போர் தொழில்' படத்தில் துப்பறியும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். திருமலை இயக்கும் சமரன் படத்தில் நடிக்கிறார். இதுதவிர சில தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார். சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த படத்தை நவீன் இயக்குகிறார்.