இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
150 படங்களை நெருங்கி விட்டவர் சரத்குமார். அரசியலுக்கு சென்றார், எம்.பி.ஆனார். சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். கடந்த தேர்தலில் கமல் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார். தோல்வியை சந்தித்தது கட்சி. இதனால் அரசியல் பணிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்து விட்டு சினிமாவில் பிசியாகி விட்டார். சமீபத்தில் சரத்குமார் நடித்த இரை என்கிற வெப் தொடர் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது அரவிந்தராஜ் இயக்கத்தில், 'பரம்பொருள்' என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் போட்டியே படத்தின் கதை. 'ருத்ரன்' படத்தில் ராகவா லாரன்சுக்கு வில்லனாக நடிக்கிறார். இது தவிர பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கும் இன்னொரு படத்திலும் நடிக்கிறார்.
விஜய்யின் 66வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விக்னேஷ் ராஜ் இயக்கத்தில் 'போர் தொழில்' படத்தில் துப்பறியும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். திருமலை இயக்கும் சமரன் படத்தில் நடிக்கிறார். இதுதவிர சில தெலுங்கு படத்திலும் ஒரு கன்னட படத்திலும் நடிக்கிறார். சரத்குமாரின் 150வது படம் ஸ்மைல் மேன். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த படத்தை நவீன் இயக்குகிறார்.