விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் |
நடிகர் சிவகுமாரின் திரைப் பயணத்தின் ஆரம்ப காலத்தில் அவரை கதாநாயகனாக போட்டு 1983 மற்றும் 1986ம் ஆண்டுகளில் 2 படங்களை தயாரித்தவர் சூலூர் கலைப்பித்தன். தற்போது சொந்த ஊரான சூலூரில் சாதாராண ஓட்டு வீட்டில் குடியிருக்கிறார். முதியோர் பென்சன் மட்டுமே அவருக்கு வருமானம். வெளியூர்களுக்கு டவுன் பஸ்சிலேயே சென்று வருகிறார். அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தமிழக அரசின் பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் செந்தலை நா.கவுதமனுக்கும் சிவகுமார் மோட்டார் சைக்கிளை பரிசாக அளித்தார். சூலுரில் நடந்த எளிய விழா ஒன்றில் இதனை அவர் வழங்கினார்.