படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக பெயரிடப்படாத புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் ஏப்ரல் 28ம் தேதி நள்ளிரவு வரை படப்பிடிப்பு நடைடபெற்றது. அப்போது நடுஇரவு 12 மணிக்கு சமந்தாவின் பிறந்தநாளைக் கொண்டாட படப்பிடிப்புக் குழுவினர் அவருக்குத் தெரியாமலேயே ஏற்பாடு செய்தனர்.
உண்மையாக படப்பிடிப்பு நடத்துவது போல ஒரு சோகமான காட்சியைப் படமாக்கினர். சமந்தாவும் சீரியசாக கண்ணீர் விட்டு நடித்துக் கொண்டிருக்க பதிலுக்கு வசனம் பேச வேண்டிய விஜய் தேவரகொன்டா, சமந்தாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு 'சமந்தா, ஹேப்பி பர்த்டே' என வசனம் பேச மொத்த குழுவும் சமந்தாவிற்கு 'ஹேப்பி பர்த்டே' என சொல்லி கேக் வெட்டி கொண்டாடினர்.
நடந்தது படப்பிடிப்பு அல்ல, தன்னுடைய பிறந்தநாளுக்காக செய்யப்பட்ட செட்டப் எனத் தெரிந்து சமந்தா மகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார்.