பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக பெயரிடப்படாத புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் ஏப்ரல் 28ம் தேதி நள்ளிரவு வரை படப்பிடிப்பு நடைடபெற்றது. அப்போது நடுஇரவு 12 மணிக்கு சமந்தாவின் பிறந்தநாளைக் கொண்டாட படப்பிடிப்புக் குழுவினர் அவருக்குத் தெரியாமலேயே ஏற்பாடு செய்தனர்.
உண்மையாக படப்பிடிப்பு நடத்துவது போல ஒரு சோகமான காட்சியைப் படமாக்கினர். சமந்தாவும் சீரியசாக கண்ணீர் விட்டு நடித்துக் கொண்டிருக்க பதிலுக்கு வசனம் பேச வேண்டிய விஜய் தேவரகொன்டா, சமந்தாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு 'சமந்தா, ஹேப்பி பர்த்டே' என வசனம் பேச மொத்த குழுவும் சமந்தாவிற்கு 'ஹேப்பி பர்த்டே' என சொல்லி கேக் வெட்டி கொண்டாடினர்.
நடந்தது படப்பிடிப்பு அல்ல, தன்னுடைய பிறந்தநாளுக்காக செய்யப்பட்ட செட்டப் எனத் தெரிந்து சமந்தா மகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார்.