படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து பாலா இயக்கி வரும் புதிய படத்தில் தற்போது நடித்து வருகிறார் சூர்யா. மீனவர் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இதை அடுத்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கப்போகிறார் சூர்யா. அதற்கான ஒத்திகையும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு இன்று நேற்று நாளை மற்றும் அயலான் படங்களை இயக்கியுள்ள ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் சூர்யா. 2024ல் தொடங்கப் போகும் அந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளதாம். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கதை களத்தில் உருவாகப் போவதாக தகவல்.