தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
உலக புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி. ஆக்ஷன் படங்கள் மூலம் புகழ்பெற்றவர். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்களின் சிறப்பு தூதராக இருக்கிறார். அதாவது போர் மற்றும் இயற்கை பேரழிவு காரணமாக புலம்பெயரும் மக்களின் நலன் குறித்து ஐ.நா.சபைக்கு தெரிவிக்கிறவர்.
கடந்த மாதம் போரால் பாதிக்கப்பட்ட ஏமன் நாட்டுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறி திரும்பி இருந்தார். இந்த நிலையில் போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையிலும் உக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ளார். அங்குள்ள மக்கள், குழந்தைகளிடம் பேசி உற்சாகப்படுத்தினார். அங்குள்ள ரயில் நிலையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா, அவர்களிடம் போர் பாதித்த மக்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் பேசி புகைப்படம் எடுத்து அவற்றை ஏஞ்சலினா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது பயணம் குறித்து ஏஞ்சலினா கூறியிருப்பதாவது: உக்ரைன் மக்களின் அதிர்ச்சியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன். யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும். என்று கூறியிருக்கிறார்.
எதிர்பாராத விதமாக ஏஞ்சலினாவை சந்தித்த மக்கள் அவர் உண்மையிலேயே ஏஞ்சலினா தானா? என்று அவரிடமே கேட்டு அவரை ஆச்சர்யப்பட வைத்துள்ளனர். அதற்கு அவர்களிடம் நான் நடிகையாக வரவில்லை. உங்களின் தூதராக வந்திருக்கிறேன். என்றார்.