படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், பிரபல நடிகர் திலீப், பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவருடைய முன்னாள் மனைவியான பிரபல நடிகை மஞ்சு வாரியரிடமும் இது தொடர்பாக விசாரணை நடந்துள்ளது.
இந்நிலையில் பிரபல இயக்குனர் சணல் குமார் சசிதரன் கூறியுள்ளதாவது: நடிகை மஞ்சு வாரியரை கடந்த சில நாட்களாக தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே பதிவிட்டிருந்தேன். மஞ்சு வாரியரின் மேலாளர்கள் சிலரின் பெயரையும் நான் குறிப்பிட்டிருந்தேன். என்னுடைய பதிவுகளுக்கு மஞ்சு வாரியர் பதில் அளிக்கவில்லை. அதனால், என்னுடைய சந்தேகம் அதிகரித்துள்ளது. யாரோ சிலரின் கட்டுப்பாட்டில் மஞ்சு வாரியர் இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.