அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் | 2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? |

தெலுங்கில் 2020ம் ஆண்டு வெளிவந்து சிறப்பான வரவேற்பைப் பெற்ற ஒரு படம் 'ஹிட்'. அந்தப் படத்தில் நாயகனாக நடித்த விஷ்வக் சென் நடித்து அடுத்து 'அசோகவனம்லோ அர்ஜுன கல்யாணம்' என்ற படம் வெளிவர உள்ளது. அப்படத்திற்காக ஒரு யு டியூபரை வரவழைத்து ஐதராபாத் வீதிகளில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு அந்த யு டியூபர் தற்கோலை செய்து கொள்வது போல 'பிரான்க்' நிகழ்ச்சியை நடத்தினர். அதற்கு சமூக ஆர்வலர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. விஷ்வக் சென் மீதும் வழக்குகள் போடப்பட்டது.
அது குறித்து விவாதிக்க விஷ்வக் சென்னை தெலுங்கு செய்தி சேனலான டிவி 9 விவாதம் ஒன்றிற்கு அழைத்தது. அப்போது விஷ்வக் மீது சில குற்றச்சாட்டுக்களை வைத்தார் செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி. அதனால் கோமடைந்த விஷ்வக் சென் பேசும் போது ஒரு பெரிய கெட்ட வார்த்தையை நேரலையின் பயன்படுத்தினார். அதைக் கேட்டு கோபமடைந்த செய்தி வாசிப்பாளர் தேவி நாகவள்ளி, விஷ்வக் சென்னை ஸ்டுடியோவை விட்டு வெளியேறும்படி 'கெட் அவுட்' சொன்னார். தேவி அவரது செயலில் பிடிவாதமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் மைக்கை கழட்டி வைத்து விஷ்வக் சென் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.




