'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து தயாரித்திருக்கும் படம் o2. த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் விக்னேஷ் கூறியதாவது: ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் பேருந்தில் பயணம் செய்கிறாள். அவளது மகனுக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பதால் அவனுடன் எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கும். அந்த பஸ் ஒரு விபத்தில் சிக்குகிறது. அப்போது பஸ்சுக்குள் இருக்கும் அனைவருக்கும் ஆக்சிஜன் தேவைப்படும் நிலை. அந்த பெண்ணின் மகனிடமிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை அபகரிக்க அனைவரும் முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் அவள் தன் மகனை எப்படி காப்பாற்றுகிறாள் என்பதுதான் படத்தின் கதை.
தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. தாய் பார்வதியாக நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீனா, ஆர்.என்.ஆர் மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், பரபரப்பான பொழுதுபோக்கு த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளது என்றார்.