ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

விமான பணிப்பெண்ணாக இருந்து சினிமாவிற்கு வந்தவர் அஞ்சலி நாயர். நெடுநல்வாடை படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவர் நடித்த டானாக்காரன் படம் சமீபத்தில் வெளியானது. தற்போது காலங்களில் அவள் வசந்தம் படத்தில் நடித்து வருகிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் இந்த படத்தில் கவுசிக் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். ராகவ் மிர்தாத் இயக்குகிறார்.
அஞ்சலி நாயர் கூறியதாவது: நெடுநல்வாடை படத்திற்கு பிறகு டானாக்காரன் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான் கொரோனா வந்தது. அதனால் தமிழில் ஒப்பந்தமான சில படங்களில் நடிக்க முடியவில்லை. சில மலையாள படங்களில் நடித்தேன். தற்போது காலங்களில் அவள் வசந்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறேன். திருமணத்துக்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் காதலிப்பது உண்மையான காதலா, திருமணத்திற்கு பிறகு காதலிப்பது உண்மையான காதலா என்பதை காமெடி, ரொமான்ஸ் கலந்து சொல்லும் படம் இது. விரைவில் அடுத்து நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்புகள் அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்படும். என்றார்.