முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? | சாந்தனு ஜோடியாக அஞ்சலி நாயர் | 'திருக்குறள்' படம் உருவானது எப்படி?: இயக்குனர் விளக்கம் | அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் |
தனுஷ் தங்களது மகன் என்று மதுரையைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். தனுஷ் தங்களது மகன் தான் என்று பல ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் கொடுத்து வரும் அவர்கள், தனுஷ் தங்களுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்ட நிலையில் தங்களைக் கொலை செய்ய கஸ்தூரிராஜா முயற்சித்ததாகவும், நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து உத்தரவு பெற்று விட்டதாகவும் குற்றச்சாட்டுகளைக் கூறி கதிரேசன் தம்பதியினர் நடிகர் தனுசுக்கும், கஸ்தூரி ராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.
இந்நிலையில் தற்போது கதிரேசன் -மீனாட்சி தம்பதியினர் கூறி வரும் குற்றச்சாட்டுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அப்படி கேட்கவில்லை என்றால் ரூபாய் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர நேரிடும் என்றும் தனுஷ் மற்றும் அவரது தந்தை கஸ்தூரி ராஜா சார்பிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.