பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் கடந்த 16ம் தேதி முதல் தொடங்கப்பட்டு வருகிற 28ஆம் தேதி தேதி வரை நடக்கிறது. இந்த விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் பல நாடுகளைச் சார்ந்த திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்தும் பல பிரபலங்கள் கவுரவிக்கப்பட்டார்கள். இந்நிலையில் நேற்று கேன்ஸ் விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நிர்வாணமான நிலையில் அங்கு வந்த ஒரு பெண் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது உடம்பில் எங்களை கற்பழிப்பதை நிறுத்துங்கள் என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படையினர் அங்கு உள்ள பெண்களை கற்பழித்து வருவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தப் பெண் கேன்ஸ் பட விழாவில் நிர்வாண போராட்டம் நடத்தியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இப்படி திரைப்பட விழா நடந்து கொண்டிருந்த பகுதியில் நிர்வாண போராட்டம் நடத்திய பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்வு கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.