திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற சரித்திரப் படத்தை இயக்கி இருக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் செப்டம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்பட மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வனுக்காக படமாக்கப்பட்ட பல காட்சிகள் மணிரத்னத்திற்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், அதனால் அந்த காட்சிகளை அவர் மீண்டும் ரீசூட் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அந்தத் தகவலை படக்குழு மறுத்துள்ளது. பொன்னியின் செல்வனுக்காக படமாக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் மணிரத்னத்துக்கு திருப்தியாக இருப்பதாகவும், தற்போது அவர் இறுதிக்கட்ட பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு இருப்பதாகவும் தெரிவித்து அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.