கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

பாடகராகவும், பாடலாசிரியராகவும், நடிகராகவும் சினிமாவில் என்ட்ரி கொடுத்த அருண் ராஜா காமராஜ், கனா படத்தில் இயக்குனராக உருவெடுத்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது திரைக்கு வந்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தையும் இயக்கினார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பாராட்டுகள் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அருண் ராஜா காமராஜ் இயக்கும் படம் குறித்த ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
கனா படத்தை அடுத்து கார்த்தியை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறார் அருண் ராஜா காமராஜ். அப்போது அவர் பல படங்களில் பிசியாக இருந்துள்ளார். அதன்காரணமாகவே உதயநிதி நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கி இருக்கிறார். இந்த நிலையில் தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை அடுத்தபடியாக இயக்குவதற்கு தயாராகிவிட்டார் அருண்ராஜா காமராஜ்.
பல மொழி படமாக உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க தென்னாப்பிரிக்காவில் நடக்கும் கதையில் உருவாகிறதாம். இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகரிடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது ராஜூமுருகன் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் கார்த்தி. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அருண் ராஜா காமராஜ் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார்.