அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
‛நேர்கொண்ட பார்வை, வலிமை' படங்களை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கும் தனது 61 ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். இந்த படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் தனது 62வது படத்தில் நடிக்கப் போகிறார். ஏற்கனவே அஜித், நடித்த என்னை அறிந்தால் படத்தில் அதாரு அதாரு என்ற மற்றும் வலிமை படத்திலும் இரண்டு பாடல்களை எழுதி இருக்கிறார் விக்னேஷ் சிவன். இப்போது அவரின் படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார்.
இந்தநிலையில் ஒரு பேட்டியில் அப்படம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அஜித்தின் 62வது படத்தை மிக வித்தியாசமான கதையில் இயக்கப் போகிறேன். என்னுடைய 100 சதவீத உழைப்பையும் முயற்சியையும் இந்த படத்துக்காக கொடுப்பேன் . அதனால் இந்த படத்தில் இதுவரை பார்க்காத ஒரு அஜித் குமாரை ரசிகர்கள் பார்க்கலாம். தரமான படமாகவும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் படமாகவும் இது கண்டிப்பாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.