பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்பட பலர் நடித்துள்ள படம் விக்ரம். ஜூன்3ஆம் தேதி திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் முதல் நாளன்று திரையரங்குகளில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டு வருவது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், அதிகாலை காட்சியில் அதிகமான தொகைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்குரிய விற்பனை வரியை அரசுக்கு முறையாக செலுத்துவதில்லை என்றும் அந்த மனுவில் கூறி இருப்பதோடு, தமிழக அரசின் சட்ட விதிகளின்படி இரவு 12 மணி முதல் காலை 9 மணி வரை திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடக்கூடாது. ஆனால் விதிகளை மீறி பல திரையரங்குகளில் அதிக காட்சிகள் திரையிடப்பட்டு வருவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து பதிலளிக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்கள். இதனால் கமல்ஹாசனின் விக்ரம் படத்திற்கு அதிகாலை காட்சிக்கான அனுமதி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.