போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

எப்போதும் பரபரப்பு கிளப்பி வருகிறவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமீபகாலமாக வில்லங்கமான படங்களை இயக்கி அதன் மூலம் கடும் விமர்சனத்தையும், வசூலையும் பெற்று வருகிறார். கடைசியாக அவர் இயக்கிய டேன்ஞ்சர் என்கிற படம் லெஸ்பியன் உறவை அப்பட்டமாக சித்தரிக்கும் படமாக இருந்தது. எதிர்ப்புகள் காரணமாக படம் இன்னும் வெளிவரவில்லை.
இந்த நிலையில் ராம்கோபால் வர்மா மீது பணமோசடி புகார் கூறப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தை மையமாக வைத்து 'திஷா என்கவுன்டர்' என்ற படத்தை தயாரித்து இயக்கினார்.
இந்தப் படத்துக்காக, ஹைதராபாத் அருகிலுள்ள குகட்பள்ளியைச் சேர்ந்த கே.சேகர் பாபு என்பவரிடம் 56 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார் ராம் கோபால் வர்மா. இந்த பணத்தை படம் வெளிவரும்போது தந்து விடுவதாக சொன்ன ராம்கோபால் வர்மா சொன்னபடி திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இதையடுத்து மியாபூர் போலீசில் ராம் கோபால் வர்மா மீது சேகர் பாபு பணமோசடி புகார் கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து ராம்கோபால் வர்மா மீது போலீசார் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.