திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மதுரை ரசிகர்கள் திடீர் திடீரென ஒட்டும் போஸ்டர்கள் பரபரப்பை கிளப்பும். ஆனால் கமல் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் அவர்களை தற்போது காவல் நிலையம் வரைக்கும் கொண்டு சென்றிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற ஜூன் 3ம் தேதி வெளிவருகிறது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளிவருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்து நாடு முழுவதும் கமலின் சினிமாவை வரவேற்று போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.
படத்தின் டிரைலரில் கமல் ஒரு ஆபாச வசனத்தை மறைமுகமாக பேசி இருப்பார். கமல் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இப்படி பேசலாமா என்கிற ஒரு விமர்சனம் நிலவி வரும் நேரத்தில் கமல் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகள் மதுரையில் அந்த ஆபாச வசனத்துடன் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மதுரை மண்டல மக்கள் நீதி மையம் கட்சியின் நிர்வாகிகளான கதிரேசன் மற்றும் வினோத் சேது ஆகியோரிடம் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.