பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'வீரமே வாகை சூடும்' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் 'லத்தி'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இப்படத்தை விஷாலின் நெருங்கிய நண்பர்களான நடிகர்கள் ரமணா, நந்தா இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கியுள்ளார். ஆனால், இயக்குனருக்குத் தெரியாமல் பட அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். ஏற்கெனவே, நடிகர் சங்க விவகாரங்களில் ரமணா, நந்தா ஆகியோரது பேச்சைத்தான் விஷால் கேட்பதாக முன்னர் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அதனால், விஷால் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் 'லத்தி' பட அறிவிப்பு விவகாரத்தில் படத்தின் இயக்குனருக்கே அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள் விஷால், நந்தா, ரமணா. படம் பற்றிய வெளியீட்டு அறிவிப்பை படத்தின் இயக்குனரான வினோத்குமார் அவரது டுவிட்டர் பதிவில் கூட பகிரவில்லை. படத்தின் வேலைகளை வினோத்குமார் தொடர்ந்து பார்ப்பாரா அல்லது விஷாலும், அவரது நண்பர்களுமே பார்ப்பார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.