இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
75வது கேன்ஸ் பட விழா கடந்த மே 17ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் உலகமெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்களும் இதில் திரையிடப்பட்டன. பார்த்திபன் இயக்கிய சிங்கிள் ஷாட் படமான இரவின் நிழல், மாதவனின் ராக்கெட்ரி உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.
நிறைவு விழாவில் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அனைத்து விருதுகளையும் மேற்கத்திய நாட்டு படங்களே வழக்கம்போல அள்ளிச் சென்றது. முதன் முறையாக ஒரு பாகிஸ்தானி படம் விருது வென்றது. இந்தியாவை பொருத்தவரை ஷானக் சென் இயக்கிய ஆல் தட் ப்ரீத்தஸ் என்ற ஆவணப்படம் விருது பெற்றது. அதற்கு கோல்டன் ஐ விருது வழங்கப்பட்டது.
தலைநகர் டில்லி மாசடைந்து வருவது குறித்தும், அந்த மாசுக்கு இடையில் மாட்டிக்கொண்ட ஒரு பருந்தையும், அந்த பருந்தை காப்பாற்ற போராடும் இரு சிறுவர்களையும் பற்றியும் இந்த படம் உருவாகி உள்ளது. இந்திய அளவில் ஏற்கெனவே பாராட்டையும், விருதுகளையும் பெற்ற படம், தற்போது கேன்ஸ் விருதையும் வென்றிருக்கிறது.