இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
காளிதாஸ் படத்திற்கு பிறகு பரத் மீண்டும் பிசியான நடிகராகி விட்டார். ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த நடுவன் வெளியானது. தற்போ 8 பிளஸ், லவ், முன்னரிவான் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவர் நடித்து வந்த மிரள் படம் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதில் வாணி போஜன் நாயகியாக நடித்திருக்கிறார்.
கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா அறிவுமணி, அர்ஜை, நரேன் பாலாஜி, மாஸ்டர் அங்கித், மாஸ்டர் சாந்தனு நடித்துள்ளனர். ஆக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கிறார். எஸ்.என்.பிரசாத் இசை அமைக்கிறார், சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி அறிமுக இயக்குனர் எம்.சக்திவேல் கூறியதாவது: ஸ்லாஷர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படம் தமிழ் திரையில் இதுவரை கண்டிராத திரில்லர் அனுபவத்தை வழங்கும், பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சிவகார்த்திகேயன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு பிரமோஷன் பணிகளை துவக்கி வைத்துள்ளார், என்றார்.