இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 169 படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த தகவல்கள் மட்டும்தான் தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள், முக்கிய கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என சில செய்திகள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.
அந்த வகையில் இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடிப்பதாகவும், மேலும் ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள்மோகன் ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார் சிவராஜ்குமார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ரஜினியை சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் நான். அவருடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய மிகப்பெரிய விருப்பம். அது அவரது 169 படத்தில் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் துவங்க இருக்கிறது என்றும் செப்டம்பரில் பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய பகுதிகளில் நடக்கும் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.