இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் நேற்று மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. 6 ஆண்டுகளாக காதலித்து வந்த இந்த ஜோடி நேற்று திருமணம் செய்தனர். இந்த நிகழ்வில் இருவரின் குடும்ப உறவுகளும் மிக நெருங்கிய நண்பர்கள் உடன் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் திருமணம் முடித்த கையோடு திருப்பதி சென்று வழிபாடு நடத்தி உள்ளனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி. மேலும் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்திலும் இருவரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தங்களது திருமணத்தையே திருப்பதியில் நடத்த எண்ணினர். ஆனால் அதற்கு ஏற்ற சூழல் அமையாததால் மகாபலிபுரத்தில் திருமணத்தை நடத்தினர். இந்நிலையில் திருமணம் ஆன மறுநாளே இன்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு - வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர். இந்த போட்டோ, வீடியோக்கள் வைரலாகி வருகிறது.