ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சென்னை: நிலம் வாங்கித் தருவதாக, நடிகர் சூரியிடம் பண மோசடி செய்தது தொடர்பாக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரமேஷ் குடவாலாவின் வாக்குமூலத்தை, போலீசார் பதிவு செய்துள்ளனர்.
காவல் துறையில் டி.ஜி.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர் ரமேஷ் குடவாலா. இவர், வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட படங்களில் நடித்த விஷ்ணு விஷாலின் தந்தை. இவரும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும் நிலம் வாங்கித் தருவதாக 2.70 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டதாக நடிகர் சூரி, அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என சூரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும், துணை கமிஷனர் நிலையில் உள்ள அதிகாரி விசாரிக்க வேண்டும்; அதை, கூடுதல் கமிஷனர் கண்காணிக்க வேண்டும்; விசாரணையை ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என கெடு விதித்தது.
இதையடுத்து, புகார்தாரரான சூரியிடம் பல மணி நேரம் விசாரித்து, 110 கேள்விகள் கேட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி, ரமேஷ் குடவாலாவுக்கு, 'சம்மன்' அனுப்பினர். அதை ஏற்று, தன் மகனும், நடிகருமான விஷால் விஷ்ணுவுடன், ரமேஷ் குடவாலா, மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் முன் ஆஜரானார். பண மோசடி குறித்து அவரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணு விஷாலிடமும் விசாரணைநடந்ததாக கூறப்படுகிறது.